*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, May 17, 2015

காற்றாகி அவன்...

மீண்டும்....
பிரபஞ்சம் நிறைக்கிறான்
வானொலிக்காரன்
தோட்டமெங்கும்
வெண் பூக்கள்
அவன் குரலாய்.

மரவண்டுகள் துளையிட்ட
துவாரங்களுக்குள்
தந்துபோன
ஒற்றைச் சிறகு
முதுகு
தாங்கா நேரங்களில்.

அந்தரத்தில் தொங்கும்
அவன் குரலை
வானலைக் காகங்கள்
பறக்கும் சுதந்திரம் சொல்லி
அரம்பையாகிய
தூக்கணாங்குருவியின்
கதை சொல்லி
எச்சில் படுத்துமோ...

அவன் குரல் தாண்டி
அதிரச் சப்தம் போடும்
மரவண்டுகள்
இறக்கைகளை
தூர்ந்த சொற்களால் தின்னுமோ
ஒருவேளை ...

கன்னிப் பேடைப் பிரசவமாய்
ஒரு முத்தம் பெறும் வலி
கொடுக்கும் வலி
முடிவிலியாய் தொடரும்
இவ்வாதை வலி
மரவண்டுகளறியா.

புன்னகைத்து
என் கையறு கண
பேரிழப்பைச் சமாளித்து
என் மார்பை
சப்பித் துப்பட்டும்
மரவண்டுகள்.

அவன் சிறு உலகத்தில்
அவனுக்கான
என் முத்தங்களை
தொங்கவிடுகிறேன்
தூக்கணாங்குருவியாய்.

தேவனே இதோ
இதோ....

மு
     த்
        த
            ம்.

ஈரமுத்தம்...

இன்னொன்று
இன்னொன்று...!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

1 comment:

Musta said...

மதிப்புமிக்க பதவிக்கு நன்றி ஐயா.இது எனக்கு மிகவும் உதவுகிறது. நீங்கள் எங்களுக்கு இன்னும் ஏதாவது பரிசளிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் புதிய தலைப்புகளுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்.

தமிழ் ஆபாச வீடியோ

Post a Comment